திருநள்ளாறில் எலக்ட்ரிக் மோட்டார் திருட்டு

காரைக்கால், செப்.29: திருநள்ளாறில் எலக்ட்ரிக் மோட்டாரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதியை சேர்ந்தவர் கென்னடி. இவர் காரைக்கால் திரு.பட்டினம் பகுதியில் உள்ள புதுச்சேரி மின்திறன் குழுமத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ரிக் மோட்டார் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி தோட்டத்திற்கு சென்றபோது, எலக்ட்ரிக் மோட்டார் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. வேலை நிமித்தமாக புதுச்சேரி சென்றதால், இதுகுறித்து கென்னடி நேற்று முன்தினம் திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எலக்ட்ரிக் மோட்டாரை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு