திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 9: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா டெல்டா ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் இணைந்து கொண்டாடியது. இதில் அரசு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு தாய்மார்களிடம் தாய்ப்பால் ஊட்டும் முறை மற்றும் அதன் பயன்களை பற்றி பேசினார்கள்.

இதில் தலைவர் பாலமுருகன், செயலாளர் அழகரசன், பொருளாளர் கணபதி, முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்னர் வீல் சங்க தலைவர் தமிழரசி, செயலாளர் கிருத்திகா, முன்னாள் தலைவர் கார்த்திகா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தாய்சேய் நலம் கருதி மிகவும் உயர்தரமான ஒரு மாதத்திற்கு தேவையான ஹிமாலயா ப்ராடக்ட் ஆயில் சோப்பு ஷாம்பு பவுடர் வைப்ஸ் கிட் ஒன்று மற்றும் பிரட் பாக்கெட் வழங்கப்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி