திருத்துறைப்பூண்டியில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற  ராமர், லட்சுமணர் சீதாதேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் புனர்பூசத்தை முன்னிட்டு காலையிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சிற ப்பு வழிபாடும் நடைபெற்றது.கோயிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் முருகையன், தலைமை பட்டாச்சாரியார் வரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை