திருத்தணி முருகன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற 1008 குடம் பாலபிஷேகம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு 1008 குடம் பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு இந்த பால்குட அபிஷேகம் வழக்கத்தை போல் நந்தி ஆத்தங்கரை ஓரத்தில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. முன்னதாக கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி சிறப்பு பூஜைகள் நடத்தி இந்த பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.திருத்தணி முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு சரவண பொய்கை திருக்குளம் மற்றும் படிக்கட்டுகள் மீது நடந்து சென்று மலைக்கோயில் அடைந்த பால்குட ஊர்வலம் காவடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள உற்சவர் கடவுள் வள்ளி தெய்வயானை சமேதராய் வீற்றிருந்த முருகனுக்கு பால் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை