திருத்தணி ஒன்றியக்குழு கூட்டம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, பாபு மற்றும் ஒன்றியக்குழு துணை தலைவர் இ.என்.கண்டிகை ஏ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு 24 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கவுன்சிலர்கள் 3 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் நீலா கோவிந்தசாமி, ஜோதி சிரஞ்சீவி, பாலாஜி, விநாயகம், வேலு வள்ளியம்மாள், பாபு கலையரசி உள்பட பலர் கலந்துகொண்டனர். …

Related posts

சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

அக்டோபரில் யு-வின் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு