திருட்டு வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

சேலம், செப்.24: சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (20). இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால், விக்னேஷ் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரை பிடிக்க, நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து நேற்று, இரும்பாலை போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த விக்னேசை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்