திருச்செந்தூர் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 17 வழக்குகளில் ₹76.73 லட்சத்திற்கு தீர்வு

 

திருச்செந்தூர்,ஆக.14: திருச்செந்தூரில் சப்கோர்ட்டில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 17 வழக்குகளில் ₹76.73 லட்சத்திற்கு சமரச தீர்வு காணப்பட்டது. திருச்செந்தூர் சப் கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. சப்கோர்ட் நீதிபதி வஷீத்குமார் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட் வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சம்பந்தமான உரிமையியல் வழக்குகள், சிறு குறு வழக்குகள், நிறைவேறுதல் வழக்குகள் உள்பட 48 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 17 வழக்குகளில் ₹76 லட்சத்து 73 ஆயிரத்து 263க்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து