Tuesday, July 2, 2024
Home » திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

by kannappan

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 11 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு பணிவிடையை தொடர்ந்து 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. வள்ளியூர் அகில திரு குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் கொடியேற்றினார். தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும், 9 மணிக்கு அன்னதர்மும், 12 மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை நடந்தது. பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 4.15 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல், மாலை 5 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது. சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கணேசன், பாலகிருஷ்ணன், செல்வகுமார், ராசாமிராஜா, ராஜேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு பணி விடை, 6.30 மணிக்கு பால் அன்னதர்மம், 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, மாலை 5 மணிக்கு அன்னதர்மம் வழங்குதல் நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 4.15 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 2ம்தேதி நடக்கிறது. அன்றைய தினம் பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அகில திருகுடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், துணைத்தலைவர் அய்யாபழம், கௌரவ தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா, துணைச் செயலாளர் ராஜேந்திரன், இணைத் தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

fourteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi