திருச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, செப்.2: திருச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் வரும் 5ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மின் பகிா்மான வட்டத்தை சார்ந்த கோட்ட அலுவலகங்களில் செப்டம்பா் மாதம் பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி துறையூர் கோட்டம்: செப்.5ம்தேதியும், ஸ்ரீரங்கம் கோட்டம் செப்.8, லால்குடி கோட்டம், செப்.12, திருச்சி கிழக்கு கோட்டம்: செப்.15, திருச்சி நகரிய கோட்டம்: செப்.19. மணப்பாறை கோட்டம் செப்.26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாட்களில் அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை