திருச்சி அருகே இன்று அதிகாலை பயங்கரம்; நடைபயிற்சி சென்ற வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த நெறிஞ்சலக்குடியை சேர்ந்தவர் மாதவன் (48). மனைவி மஞ்சுளாதேவி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இன்று அதிகாலை மாதவன், கைலாஷ் நகர் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்த மாதவன், அந்த இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எஸ்பி சுஜித்குமார், லால்குடி டிஎஸ்பி சீத்தாராமன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். திருச்சியில் இருந்து நீலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசார் வழக்கு பதிந்து மாதவன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது