திருச்சியில் முதியவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி, நவ.2: திருச்சியை சேர்ந்தவர் விஜயன்(45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மூத்த மகளை ரவிச்சந்திரன்(23) என்பவர் ஒருதலையாக காதலித்து வருவதாக தெரிகிறது. இதையறிந்த விஜயன், ரவிச்சந்திரனின் பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் விஜயன் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி செங்கற்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் விஜய் சாரதி(43) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி