திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது-திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை :  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் கொடிமரத்திற்கு அபிஷேகமும், 9.30 மணி முதல் 9.45 மணிக்கு இடையே தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் 10 மணிக்கு இடையே பிரமோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக தாயாரின் சின்ன சேஷ வாகன சேவை நடந்தது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதா பார்கவி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து