திருக்கோவிலூர் அருகே அமைச்சர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

 

திருக்கோவிலூர், மார்ச் 23: திருக்கோவிலூர் அருகே அமைச்சர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் அறிமுக கூட்டம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலாசனை கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு தனது காரில் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியில் வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரசாத் மற்றும் தலைமை காவலர் திருமால் தலைமையிலான போலீசார், அமைச்சரின் காரை மறித்து சோதனை செய்தனர்.  சோதனைக்கு பின்னர் அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி