திருக்கோவிலூரில் குட்கா விற்றவர் கைது

 

திருக்கோவிலூர், ஜூலை 17: திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் காசி மகன் மணிகண்டன் (38). இவர், அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசாருக்கு, மணிகண்டன் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் டீக்கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மணிகண்டன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை