Saturday, July 6, 2024
Home » திருக்கோயிலுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும் : அமைச்சர் சேகர் பாபு!!

திருக்கோயிலுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும் : அமைச்சர் சேகர் பாபு!!

by kannappan

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளின் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் சீராய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (10.08.2021) திருக்கோயில்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேம்பாடு குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடிப்படை தேவைகள், மாணவர்களுக்கான வசதிகள், நவீன தொழில்நுட்ப முறையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக திருக்கோயில் பள்ளிகளும் அமைய வேண்டும் என்பதற்கான இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பிரநிதிகள் விரைவில் தங்களுடைய பள்ளிகளுக்கு தேவையான செயல்முறை திட்டத்தை தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் சாரணார் இயக்கம், நாட்டு நலப்பணி திட்ட இயக்கம் போன்ற சமூக அமைப்புகளை ஏற்படுத்தி அதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., மற்றும் திருக்கோயில் பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.   …

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi