திருக்கழுக்குன்றத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

 

திருக்கழுக்குன்றம், ஏப்.7: திருக்கழுக்குன்றத்தில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளராக ஜி.செல்வம் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செல்வம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக சார்பில் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் சாலை பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏவும், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வீ.தமிழ்மணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் திமுக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, இளங்கோ, சரவணன், கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், விஜய், பாளையம், ஆனந்த், வேதகிரி, நக்கீரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா மற்றும் நிர்வாகிகள் சங்கர், அழகேசன், பழனிசாமி, சண்முகம், குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தயாளன், மணிகண்டன், அன்பு கமலஹாசன், விசிக நிர்வாகி நகர் செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை