டெல்லி: திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்துடன் டிஜிபி நாளை மாலைக்குள் ஆலோசனை நடத்தி கூடுதல் பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும். நவம்பர் 25-ல் தேர்தலுக்கும் நவ.28-ல் வாக்கு எண்ணிக்கைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. …