Monday, July 1, 2024
Home » தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை

தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை

by Karthik Yash

தியாகதுருகம், ஜூன் 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவர் மகன் பழனிவேல் (62). இவரது மனைவி அருள்மணி ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது வயலில் கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருவதால் இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயல்வெளிக்கு சென்றனர். பின்னர் விவசாய வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு நேற்று முன்தினம் சுமார் மாலை 5 மணி அளவில் திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த அட்டிகை, தாலி செயின், கை வளையல், தோடு, மோதிரம் உள்ளிட்ட சுமார் 26 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து பழனிவேல் உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பழனிவேலின் மகன் பாஸ்கர் என்பவருக்கும் நவீனா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் கடந்த 24ம் தேதி அன்று நவீனாவுக்கு சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் நகைகளை பத்திரமாக பீரோவில் வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இதனை அறிந்துகொண்ட மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 26 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi