திமுக வடக்கு மாவட்டஇளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 

திருப்பூர், ஜூலை 25: திமுக திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வது,

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி வருகிற 29ம் தேதி காலை 9 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிற கூட்டத்தில், சீருடையுடன் கலந்து கொள்வது, மேற்கண்ட கூட்ட நிகழ்ச்சிக்காக ஒரு நாள் முன்னதாக 28ம் தேதி சென்னை சென்று திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் ஆசி பெற்றும், கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன் பாலசுப்பிரமணியம், சசி (எ)ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர்,பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்