திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் சிவன்மலை கோவிலில் சாமி தரிசனம்

காங்கயம்,மே14: திருப்பூர் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தனது பிறந்த நாளான நேற்று,காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது காங்கயம் நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன், நகர துணை செயலாளர் எம்.எஸ்.சுப்பு, பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கே.கார்த்திகேயன், காங்கயம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எஸ்.மகேஷ், சிவன்மலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தே.சண்முகம், சிவன்மலை வார்டு உறுப்பினர் சிவன்மலை சிவக்குமார் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை