திமுக பேச்சாளருக்கு முன்ஜாமீன் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாஜவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்சாளருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நடிகைகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு சைதை சாதிக் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு