Thursday, June 27, 2024
Home » திமுக பிரமுகர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக பிரமுகர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

by kannappan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உடல்நலக்குறைவால் இறந்த காஞ்சிபுரம் எம்பி செல்வத்தின் தந்தை திமுக பிரமுகர் சிறுவேடல் கணேசன் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வத்தின் தந்தை மறைந்த சிறுவேடல் வெ.கணேசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான காஞ்சிபுரத்தை அடுத்த சிறுவேடல் கிராமத்தில் நேற்று நடந்தது. திமுகவில் கிளை செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவருக்கு திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் எம்பி செல்வத்துக்கு தொலைபேசி மூலமாக ஆறுதல் தெரிவித்தார்.அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  கனிமொழி எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், துணை பொதுச் செயலாளர் எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், மறைந்த திமுக பிரமுகர் கணேசன் உடல் வைக்கப்பட்டு இருந்த சிறுவேடல் கிராமத்துக்கு எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பொன்.கவுதமசிகாமணி, அண்ணாதுரை ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, விசிக எம்எல்ஏக்கள் பனையூர் பாபு, பாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஆர்த்தி, எஸ்பி டாக்டர் சுதாகர் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக சார்பில் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் வளையாபதி, அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நெசவாளர் அணி அன்பழகன், திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்மணி, புகழேந்தி, ஆர்டி அரசு, காஞ்சிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பூபாலன், சாலவாக்கம் குமார், சேகர், ஞானசேகரன் மற்றும் வக்கீல் துரைமுருகன், தேவேந்திரன், படுநெல்லி பாபு ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்….

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi