திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக அலுவலகமான கூளூர் கலைஞர் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். பூபதி அறிவுறுத்தல்படி சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ். சந்திரன் ஆகியோர் வழிகாட்டுதல்படியும் நடைபெற்ற இதில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம். ராஜேந்திரன் தலைமை வகித்தார். மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை  திருவாலங்காடு மேற்கு ஒன்றியம் முழுவதும் கொண்டாட வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். படிவத்தில் உரியவர்களே கையொப்பமிட்டு பெற வேண்டும். நமது ஒன்றியத்தில் 5 ஆயிரம் உறுப்பினர்கள் தொகுதியில் 30 ஆயிரம் உறுப்பினர்கள் என்ற இலக்கில் வருகிற தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மேலும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஒன்றிய கழக செயலாளர் கூளூர் எம். ராஜேந்திரன் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.  ஒன்றிய துணைச் செயலாளர்கள் கே.கமலநாதன், அர்ஜுனன், லோகநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர். யுவராஜ், துணை அமைப்பாளர்கள் டி.ஆர். பாபு, அம்பேத்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சதீஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள்,  பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் பூங்கா: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அரசியல் தலைவர்களை பற்றி அவதூறாக பேசி யூடியூப்பில் வருமானம் சம்பாதிக்க தரம் தாழ்ந்து வீடியோ வெளியிடுவதா? சாட்டை துரைமுருகனுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

செவிலிமேடு மேம்பாலத்தில் லாரிகள் மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு