திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது: அதிமுகவினர் போலீசார் உடன் வாக்குவாதம்..!

சென்னை: திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை  ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள 49வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் நரேஷ் என்பவர் அத்துமீறி புகுந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர், அவரது சட்டையை கழற்றி, அடித்து இழுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது. இதுபற்றி தனது பேஸ்புக் வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். இதற்கு திமுக மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் நரேஷ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது  செய்யப்பட்டுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட உள்ள எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுகவினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நுங்கம்பாக்கம் காவல் நிலைய பகுதியில் அதிமுகவினர் திரண்டுள்ளதால், அவரை வேறு காவல் நிலையம் அழைத்துச் சென்று ரிமாண்ட் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை