திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 188 வார்டுகளில் போட்டி: வீடுவீடாக பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக 188 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதன்படி  சென்னை மாநகராட்சியில் 35வது வார்டில் ஜீவன், 139வது வார்டு சைதை.ப.சுப்பிரமணி, தாம்பரம் மாநகராட்சியில் 26வது வார்டில் புஸீரா பானு நாசர், 35வது வார்டில் உமா மகேஸ்வரி, ஆவடி மாநகராட்சியில் 11வது வார்டில் சுப்பிரமணி, 23வது வார்டில் சூர்யகுமார், 48வது வார்டில் கார்த்திக் காமேஷ், திருப்பூர் மாநகராட்சியில் 24வது வார்டில் நாகராஜ், 43வது வார்டில் சாந்தாமணி, 20வது வார்டில் சுகுமார், மதுரை மாநகராட்சியில் 44வது வார்டில் தமிழ்ச்செல்வி, 52வது வார்டில் வழக்கறிஞர் பாஸ்கரன், 100வது வார்டில் முத்துலட்சுமி, கோவை மாநகராட்சியில் 14வது வார்டில் சித்ரா தங்கவேல், 26வது வார்டில் சித்ரா வெள்ளங்கிரி, 55வது வார்டில் அன்பு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 37வது வார்டில் மகேஷ், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 27வது வார்டில் ராஜேந்திரன், மறைமலைநகர் நகராட்சியில் 9வது வார்டில் சார்லஸ், மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 3வது வார்டில் எழிலரசி, 6வது வார்டில் சுரேந்தர், 14வது வார்டில் துர்கா, திருப்போரூர் பேரூராட்சியில் 6வது வார்டில் லோகநாதன், 9வது வார்டில் சசிகலா, மாங்காடு நகராட்சியில் 6வது வார்டில் சுமதி முருகன், 9வது வார்டில் பி.முருகன், கோவில்பட்டி நகராட்சியில் 11வது வார்டில் ஆர்.எஸ்.ரமேஷ், 15வது வார்டில் மணிமாலா, 19வது வார்டில் கிருஷ்ணகுமார், 20வது வார்டில் தெய்வேந்திரன், 24வது வார்டில் குருவுத்தாய், 26வது வார்டில் பரமேஸ்வரி, கடம்பூர் பேரூராட்சியில் 10வது வார்டில் ரெங்கசாமி, பூந்தமல்லி நகராட்சியில் 2வது வார்டில் சுகுணா, திருவள்ளூர் நகராட்சியில் 22வது வார்டில் கல்பனா, திருநின்றவூர் நகராட்சியில் 19வது வார்டில் திலகா பாபு, திருமழிசை பேரூராட்சியில் 2வது வார்டில் மஞ்சுளா, வாலாஜாபாத் பேரூராட்சியில் 10வது வார்டில் சிவசங்கரி உட்பட மாநிலம் முழுவதும் 188 வார்டுகளில் மதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.இவர்கள், பம்பரம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்