திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை : திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அத்துடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 ,மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்வர்டு பிளாக், ஆதிபேரவை, மக்கள் விடுதலை கட்சி, வாழ்வுரிமை கட்சிகளுக்கு தலா 1 இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது.இந்நிலையில் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகள் மட்டுமில்லாது, கூட்டணி கட்சியினர் 14 பேரும் உதய சூரியனில் களம் காண்கின்றனர். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காணவுள்ளது.இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத வரலாறு என்று ஸ்டாலினை மெச்சிக்கொள்கின்றனர் திமுகவினர்..!…

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்