திமுக, கம்யூனிஸ்ட், விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து புதுகையில் கடையடைப்பு போராட்டம்

புதுக்கோட்டை: காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி நீர் வழங்காத ஒன்றிய பாஜ அரசு கண்டித்தும், அதற்கு தடையாக உள்ள கர்நாடக அமைப்புகளை கண்டித்தும் வரும் நாளை 11ம் தேதி (புதன்கிழமை) புதுக்கோட்டை ஐஓபி வங்கி அருகில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு வடக்கு மாவட்ட திமுக, கூட்டணி கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி அடைய செய்து என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திமுக நகர செயலாளர் செய்தில், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி, தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஞான இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனபதி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வெள்ளை நெஞ்சன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் நிர்வாகிகள், விவசாய சங்க கூட்டு இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வாலிகண்டபுரம் ஊராட்சியில் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு பொது குடிநீர் கிணற்றில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார் லெப்பை குடிகாடு பகுதியில் தேர்வான இடத்தில் விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்

கோரிக்கை மனு இலவசமாக எழுதி தர ஏற்பாடு பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 60 மாதம் வரையான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம், ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் பணி