திமுக எம்பிக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது

சென்னை: திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16ம் தேதி மாலை 5.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…