திமுக இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கல்

தென்காசி,செப்.8:தென்காசியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. தென்காசியில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவரிடம் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் தென்காசி தெற்கு ஜெயபாலன், வடக்கு ராஜா எம்எல்ஏ, தனுஷ்குமார் எம்பி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இளைஞரணி சார்பில் தெற்கு மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜா வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் தென்மண்டல இளைஞரணி துணைச்செயலாளர் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், துணை அமைப்பாளர்கள் தெற்கு சிவக்குமார், கிருஷ்ணராஜ், ஐவேந்திரன் தினேஷ், சுப்பிரமணியன், முகமது அப்துல்ரஹீம், வடக்கு ராயல் கார்த்திக், சரவணன், மாரிராஜ், ராஜராஜன், மணிகண்டன், அன்சாரி உள்பட இளைஞரணியினர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை