திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர்  பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுகமன்ற வளாகத்தில்  நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் சு.தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் . மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கி .வே .ஆனந்தன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மீ.வி. கோதண்டம் .கே.எஸ்.சுப்பிரமணி. நா.மோகன்ராஜ், ஏ.கே. சுரேஷ் .செந்தமிழ் சசிகுமார் .வா. மோகன் .பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் . சாமுவேல் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு தலைமைக் கழகம் அறிவித்துள்ள அறிவுறுத்தலின் படி புதிய உறுப்பினர்களை வீடுகள் தோறும் நேரடியாக சந்தித்து இளைஞர் அணி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்பட வேண்டுமென பேசினர் . இதில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்