உடுமலை, மே 10: திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் உடுமலையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மெஞ்ஞான மூர்த்தி தலைமையில் இதில் செய்தித்துறை அமைச்சர் முபெ.சாமிநாதன், தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், தென்றல் சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர்,
ஷ்யாம் பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு பர்வத வர்த்தினி, திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினர் சாமி, மொடக்குப்பட்டி ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரகுபதி, இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, ஒன்றியக் குழுத் பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சிமன்ற தலைவர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.