திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

பண்ருட்டி, மே 8: பண்ருட்டி நகர திமுக சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பண்ருட்டியில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். பண்ருட்டி நகர செயலாளர், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட அவை தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணை பொது செயலாளரும், உயர் கல்வி துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்கள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை ஆகியவை பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. முதல்வர் பல்வேறு உயர்ந்த திட்டங்கள் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பொறுப்பில் உள்ள ஆளுநர் திராவிட மாடல் பற்றி தெரியாமல் பேசி வருகிறார், என்றார். மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட தொண்டரணி கதிர்காமன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், மேல்பட்டாம்பாக்கம் பேருராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பலராமன், அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் கவுரி அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசந்தர் நன்றி கூறினார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது