திமுக அமோக வெற்றி சோமனூரில் கொண்டாட்டம்

 

சோமனூர், ஜூன் 5: தமிழகத்தில் இந்தியா கூட்டணி அபாரமாக வெற்றி பெற்று 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்று சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பின்பு வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழக முழுவதும் வெற்றி பெற வியூகம் அமைத்து தேர்தல் பணி ஆற்றி இந்தியாவே திரும்பிபார்க்கும் விதமாக சிறந்த வெற்றியை பதிவு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மத்தியில் சிறந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்து மக்களிடம் கொண்டு சென்ற அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து கிட்டாம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை