திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைக்க ஆணை

திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லை பகுதி விரிவாக்க பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சியுடன் சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அடியனுத்து, தோட்டனுத்து, முள்ளிப்பாடி, பள்ளப்பட்டி, பொன்னிமாந்துறை பிள்ளையார்நத்தம், பாலகிருஷ்ணாபுரம் குரும்பபட்டி உள்ளிட்ட 10 கிராம ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சி உடன் இணைக்க தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைக்க ஆணை வெளியிட்டுள்ளது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி