திண்டுக்கல், ஏப். 7: திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய் பாபா ஆலயம். இங்கு நாள்தோறும் பாபாவிற்கு வழிபாடுகள் நடக்கும். குறிப்பாக பாபாவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்படி நேற்று பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து பாபாவிற்கு பக்தர்கள் விபூதி அபிஷேகம் நடத்தினர். பின்னர் அனைவருக்கும் காலையில் இட்லியும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை சிறப்பு பஜனை நடத்தப்பட்டு, அனைவருக்கும் சப்பாத்தி வழங்கப்பட்டது.