Thursday, June 27, 2024
Home » திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் புகை பிடித்தவர்களிடம் அபராதம் வசூலிப்பு

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் புகை பிடித்தவர்களிடம் அபராதம் வசூலிப்பு

by Karthik Yash

திண்டுக்கல், மார்ச் 2: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி நேற்று மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சந்தனகுமார், லோகேஸ்வரன், முரளிதரன் உள்ளிட்டோர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைபிடித்த 5 நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிகளின் அருகில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய ேபாது 2 கடைகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அக்கடைகளில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 அபராதம் வித்தனர்.

You may also like

Leave a Comment

20 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi