திண்டுக்கல், மார்ச் 2: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி நேற்று மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சந்தனகுமார், லோகேஸ்வரன், முரளிதரன் உள்ளிட்டோர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புகைபிடித்த 5 நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளிகளின் அருகில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய ேபாது 2 கடைகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அக்கடைகளில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 அபராதம் வித்தனர்.