திண்டுக்கல். செப். 13: திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு நாகா நிறுவனத்தினர் சார்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்நிறுவனத்தினர் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இரண்டு பேட்டரி வாகனங்களை ஊராட்சி தலைவர் மீனாட்சியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பிடிஓ அண்ணாதுரை, ஏபிடிஓ ராஜா, ஊராட்சி செயலாளர் சுதாகர், நாகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சிவராமன், கணபதி, மேலாளர் பாக்யராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.