திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளி படுகாயம்

திண்டுக்கல், செப். 22: திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளியின் கால் துண்டானது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சுப்புராசு (45). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக மது போதைக்கு அடிமையானதால், திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சீலப்பாடி டாஸ்மாக் கடை அருகே மீண்டும் மது போதையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு 2 கணுக்கால்கள் துண்டானது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்