திண்டுக்கல்லில் மநீம வேட்பாளர் வாபஸ்: திமுகவில் இணைந்தார்

திண்டுக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பாரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மநீம திண்டுக்கல் நகரச் செயலாளர் விஜயக்குமார் உள்பட பலர் இணைந்தனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை