திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

திண்டுக்கல், ஆக. 10: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவுக்கான இறுதி போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி, வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. அதேபோல், மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி அணி, ஜம்புளியம்பட்டி ஜெ.ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது.பின்னர் நடந்த விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி