திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு

திண்டுக்கல், மார்ச் 31: திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம், கல்நாட்டான்பட்டி, அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வீடுகளின் சுவர்களில் கட்சி சின்னம் வரைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வக்கம்பட்டியை சேர்ந்த அழகுவேல் (50), அழகம்பட்டியை சேர்ந்த சசிகுமார் (37), கல்நாட்டாம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (40), முருகேசன் (56), அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த சடையப்பன் (70) ஆகிய 5 பேர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு