திண்டுக்கல்லில் கனமழை கொட்டி தீர்த்தது

 

திண்டுக்கல், அக். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3.15 மணி அளவில் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குள்ளனம்பட்டி, நாகல் நகர், ஆர்.எஸ்.ரோடு, தாடிக்கொம்பு ரோடு, நேருஜி ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட், திருவள்ளுவர் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் ரோட்டில் தேங்கி நின்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர். மேலும் மாலை நேரம் என்பதால் பள்ளி விட்டு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

 

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு