திண்டிவனம் அருகே

திண்டிவனம், ஜூலை 4: திண்டிவனம் அடுத்த நல்லாளம் அருகே உள்ள அழகியப்பாக்கம் கிராமம், விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் மகன் யுவராஜ் (23). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், 2ம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு முருக்கேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வெள்ளகுளம் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் யுவராஜ் பலத்த காயமடைந்துள்ளார். அவரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், யுவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து யுவராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்