திண்டிவனம், ஜூலை 4: திண்டிவனத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது(45), சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டிவனம் பூந்தோட்டம் பகுதிக்கு பக்ரீத் பண்டிகைக்காக வந்துள்ளார். இந்நிலையில் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட் மீண்டும் அவரது மகன் அப்துல்கலாம் ஆசாத்(24), என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு இருவரும் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளனர். அப்போது திண்டிவனம் தீர்த்தகுளம் ரயில்வே மேம்பாலத்தின் மேல்பகுதியில் சென்றபோது, எதிரே காய்கறி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷேக்முகமது பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதி மகன் கண் முன்னே தந்தை பலி
previous post