திண்டிவனம் அருகேவெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி

திண்டிவனம், ஏப். 12: திண்டிவனம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டிவனம் அடுத்த சாரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்(48). இவர் நேற்று முன்தினம் இரவு சாரம் மெயின் ரோட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல, சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், ஏகாம்பரம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தவரை ஒலக்கூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதேபோல் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பள்ளத்தெருவை சேர்ந்தவர் அய்யனார் (53), கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் திண்டிவனம் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும், திண்டிவனத்தில் இருந்து ஓங்கூருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஓங்கூர் சந்திப்பில் பேருந்தில் இருந்து கீழே இறங்கியவர்கள், சாலையை கடக்க காத்திருந்தனர்.

அப்போது திடீரென அய்யனார் மட்டும் சாலையை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரண்டு விபத்து குறித்தும் ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்காம்பேட்டையில், சிங்கனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி (77), என்பவர் வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு