திட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை நிறைவேற்ற சிறப்பு அறிக்கை தயார் செய்ய வேண்டும்

திருச்சி, அக்.4: திட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை நிறைவேற்ஹ சிறப்பு அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரதீப்குமார் அறிவுறுத்தினார். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம், முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்), முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத்திட்டம் உட்பட திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் பணி நிலுவைக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, திட்டக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து அனைவரும் தொிந்து கொள்ள வேண்டும். திட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு அறிக்கை தயார் செய்ய வேண்டும். ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை பணிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்கா தாரிணி, மாவட்ட ஊராட்சி செயலாளா் சுரேஷ், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு