திசையன்விளை,செப்.20: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி மற்றும் அஞ்சல் துறை சார்பில் இன்றும், நாளையும் (20,21ம்தேதி) ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கல்லூரியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆதார் திருத்தம் தொடர்பான சேவையை பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரவடிவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.