திங்கள்சந்தை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

திங்கள்சந்தை, அக். 12: தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி முதல் பெருங்கோடு சமூக நலக்கூடம் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் றீத்தம்மாள் தலைமை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் கவுன்சிலர் சுஜாதா, பேரூராட்சி பணியாளர்கள், செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்