தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரத்தை பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை

ஊட்டி :  ஊட்டியில் மீண்டும் மழை துவங்கியுள்ள நிலையில் மலர் அலங்காரங்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களுக்கு மேல்  தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு  மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்நிலையில், தமிழகத்தில் வரும் 16ம்  தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம்  தெரிவித்துள்ளது. எனினும், முன்னதாகவே நீலகிரி மாவட்டத்தில் மழை துவங்கி  பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஊட்டியில்  மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் சீசனை  முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு  மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. புல்மைதானத்தில் 2 ஆயிரம் தொட்டிகளை  கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில், பிளாஸ்டிக் ப்ரீ என்ற  ஆங்கில வார்த்தை அடங்கிய மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்  அலங்காரத்தை தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து  செல்கின்றனர். இந்த மலர் அலங்காரம் மேரிகோல்டு மற்றும் இதர மலர்களை கொண்டு  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டியில் தற்போது மழை  பெய்யத்துவங்கியுள்ளதால், இந்த மலர் அலங்காரங்கள் பாதிக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேரிகோல்டு மலர்கள் அழுகும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே, மழையால் இந்த மலர் அலங்காரங்கள் மற்றும் மலர் செடிகள்  பாதிக்காமல் இருக்க நாள் தோறும் பூங்காக ஊழியர்கள் பிளாஸ்டிக் போர்வை  கொண்டு மலர் செடிகளை பாதுகாத்து வருகின்றனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை