தாறுமாறாக ஓடி கடைக்குள் புகுந்த லாரி: டிரைவர் படுகாயம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே தாறுமாறாக ஓடிய கனரக லாரி, சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த டிரைவர் சிகிச்சை பெற்று வருகிறார்.தாம்பரத்தை சேர்ந்தவர் மனோகரன் (43), டாரஸ் லாரி டிரைவர். இவர், நேற்று காலை மாதவரத்தில் ஜல்லி கற்களை இறக்கி விட்டு வாலாஜாபாத் நோக்கி லாரியில் திரும்பி கொண்டிருந்தார். தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் பல்லாவரம் அடுத்த சீனிவாசா நகர் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோர பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.  இதில், லாரி முன்பக்கம் சேதமடைந்து, டிரைவர் மனோகரனின் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடையில் யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், டிரைவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை